0

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

நேற்று நடந்தது போல் இருக்கிறது
இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.

எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…
[audio:enakkoru-annai.mp3]

sadish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *