0

இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)

சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது.
மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன்.

கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது.

“தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின் மெட்டில், அவரே வேறு வரிகளை அமைத்துப் பாடியிருந்தார்.

ஏழேழு கடல் கடந்து
இங்கு வந்து வாழ்பவரே
என்றென்றும் உனக்கெனவே
இசை கொடுப்பேனே – இசை கொடுப்பேனே…

எங்கோ மண்ணில் பிறந்தாலும்
ஏதோ மண்ணில் வாழ்ந்தாலும்
உனையும் என்னையும் இணைப்பதெல்லாம்
உயிரின் மேலாம் – இசை தானே…

உன் வாழ்வில் சில நொடிகள்
என் வாழ்வில் சில நொடிகள்
என்றென்றும் நினைவில் நிற்கும்
இந்நொடி தானே இந்நொடி தானே…

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

ஆ..ஆ…(ஆலாபனை)

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே – இனியும்
அழுது தேப்பாதே…
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே…
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

நம்மையறியாமல்
நம் கண்களின் ஓரத்தில் கண்ணீரைத் துளிர்க்க வைப்பதும் அவரே
அதைத் துடைப்பதுவும் அவரே!

எனக்குத் தெரிந்தவரை இதுதான் ஒரு தந்தையின் தாலாட்டு.
தன் இசை பலருக்குத் தாலாட்டாய் இருக்கிறது என்பதை அவரும் உணர்ந்தே தான் கொடுத்து வருகிறார்.

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

sadish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *