0

மேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் என்னுடைய சில பாடல்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
சமீபத்தில், அட்லாண்டா மாநகரில் நிகழ்ந்த ஒரு தன்னார்வத் தொண்டர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் என்னைப் பாட அழைத்து இருந்தனர்.


அப்போது, ராஜா சாரின் இந்த இனிமையான பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இங்கே கீழே. பார்த்து மகிழுங்கள். என்னுடன் இணைந்து பாடியவர்,  பரிமளா.

கேளடி கண்மணி படத்திற்காக, கே.ஜே.யேசுதாஸும் உமா ரமணனும் பாடியது.

இதே நிகழ்வில், மரகதமணி அவர்களின் இசையில், அழகன் திரைப்படத்தில் வந்த ‘சாதி மல்லி பூச்சரமே’ பாடலையும் பாடினேன். படத்தில் எஸ்.பி.பி அவர்கள் பாடியது.
அதன் காணொளி இங்கே.

இதற்கு முன்னால், ஃபெப்ரவரி மாதத்தில், எங்கள் குழுவின் மாதாந்திர சந்திப்பில், டி இமானின் இசையில் பிரதீப் குமார் பாடிய ‘அம்முக் குட்டியே’ பாடலைப் பாடினேன். அதுவும் நண்பர்கள் மிகவும் ரசித்துக் கேட்டனர். அதன் காணொளி இங்கே.

ரசித்து மகிழ்ந்தாலும், இல்லையென்றாலும் கமெண்ட்டுங்கள்.

sadish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *