0

என்ன குறையோ என்ன நிறையோ

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் பாடிய பாடல் இது. எழுதியது அறிவுமதி.

நண்பர் கானா பிரபா, தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த மாதம் தான் இந்த பாடலை முதன் முறையாகக் கேட்டேன்.

கேட்ட பொழுதில் இருந்து, தினமும் என் காதுகளுக்கு அள்ளி அள்ளி ஊற்றியதில் இதன் வரிகள், மனதில் பதிந்து போனது. பின்னர் ஸ்ம்யூல் என்கிற கைப்பேசிக்கான செயலியில் இதனை என் குரலில் பாடிப் பதிந்தேன். அதனைக் கீழே உள்ள காணொளியில் கண்டு ரசியுங்கள்.

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்
உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்
பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......

பாடல் பிடித்து இருந்தால், கீழே உள்ள இடத்தில் கமெண்ட்டுங்கள்.

sadish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *