வானத்தின் மேல் நின்று

(குமாரின் பயணம் தொடர்கிறது..)

குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை…

ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு…
இது அவனுக்கே அவனுக்கான நேரம்…

அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்..
சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும்.
சில பாடல்கள் மகிழ வைக்கும்,
சில அவனை நெகிழ வைக்கும்,
சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று)
மற்றும் சிலவோ அவன் இதயத்தை.

சமீபத்தில் ஒரு நாளில் அடிக்கடி Rewind ஆன பாடல் இது !

வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

அட அட, என்ன ஒரு கூர்மையான எழுத்து !

ஒரு விஷயத்தைக் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்பொழுது, அதன் உண்மை வடிவங்கள் புலப்படும்..
எத்தனை எத்தனை பேதங்கள்…எல்லாம் யார் செய்தது ? மனிதன் தானே ?

நான்கு வரிகளில் மிக அழகாய் எழுதி இருக்கிறார்… (வைரமுத்து தானே ?)

இன்னும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிக்க, சிந்திக்க வைக்க கூடியது.
கேட்டுப் பாருங்கள்.

படம் : அமராவதி
பாடியவர் : அசோக்
இசை : பால பாரதி (ஆமா..இவர் என்ன ஆனார்….ஏதோ சொந்த ஊருக்கு போய் செட்டில் ஆகிட்டார்னு கேள்விப்பட்டேன். தெரியவில்லை. இதே படத்தின் ‘தாஜ் மஹால் தேவையில்லை’ பாடலுக்காக ராஜா சாரின் பாரட்டைப் பெற்றவர் இவர்…ஹும்ம்ம்)

Listen to the song here.

உடலென்ன உயிரென்ன
உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே

ஓடும் நதியெல்லாம் கடலோடு
உடல் எல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே

இந்த வாழ்க்கை வாடிக்கை
வெறும் வாண வேடிக்கை
இன்பம் தேடி வாடும் ஜீவனெல்லாம்
தவிக்குது துடிக்குது !

சரணம் - 1

காதலைப் பாடாமல் காவியம் இங்கில்லை…
ஆனாலும் காதல் தான் பாவம்…
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்குக் கோபம்….

இது சாமி கோபமோ-இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறு

உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்—ஓ…
உலகத்தில் அது தானே சட்டம்..

சரணம் - 2
வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

இது பூவின் தோட்டமா - இல்லை முள்ளின் கூட்டமா…

முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல..
மரணத்தைப் போல் இங்கு வேறேதும் மெய்யல்ல..

நான் போகும் வழி கண்டு சொல்ல - ஓ…
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல..

2 Responses to “வானத்தின் மேல் நின்று”

  1. 1 gnanasooniyamon 13 Mar 2007 at 3:27 am link to this comment

    நல்ல பாடல்.அருமையான இசை.உங்களுக்கு வந்த அதே கேள்விதான் எனக்கும்.பால பாரதி என்ன ஆனார்?

  2. 2 Rajaon 14 Mar 2007 at 2:52 am link to this comment

    Nice song… Intha veenaiku theriyathu… i knew its oldest songs… This song get me back my olden days

Trackback URI | Comments RSS

Leave a Reply