Aug 28, 2009 -
பயனுள
No Comments
பயனுள
No Comments பயிர் [payir.org] சமூக சேவை அமைப்பு
என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவரும், நண்பருமான செந்தில் குமார் இந்தியாவில் நடத்தும் ஒரு சமூக சேவை அமைப்பு தான் “பயிர்”.
அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, அது வரை, பத்து வருடங்களில் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியா சென்றார்.
திருச்சி அருகில் உள்ள “தேனூர்” என்கிற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையமும் ஆரம்பித்து, அந்த ஊர் மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் இலவசமாய் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது பேட்டி சமீபத்தில் விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. அதன் ஒளி ஒலிப்பதிவை இங்கே பதிவதில் எனக்கொரு பெருமை.
அவருக்கும் அவரது அமைப்புக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்ய, அவரது இணைய தளத்தைப் பாருங்கள்.