எங்க ஊரு பாட்டுக்காரன்

காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார்.

அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில்.

திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும்.

நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்…

“பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…”

அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா போன்ஸ்லே தான்…

எதோ ஒரு மெல்லிய சோகம் கொண்டு வருவதற்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட குரலோ ?

“ராசாவே உன்னைத் தொட்டு நானும் வாழ மாட்டேனா
என் வீட்டுக்காரர் பாட்டும் காதில் கேட்க மாட்டேனா ”

இழைந்தோடுகிறது இன்னிசை…

ஒரு ஏக்கம் தொனிக்கும் பாடல்… பாடலின் இசை மட்டுமல்ல…வரிகளும் சேர்ந்து தான் இந்த தாக்கத்தை தர முடியும்…தனக்குள் நினைத்துக் கொள்கிறான்…

பாடலைக் கேட்ட எந்த ராசனும் கொஞ்சமாவது இரங்கியே ஆக வேண்டும்…

மீண்டும் பல்லவிக்கு வருகிறது பாடல்…

“செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே
செர்ந்திருந்தால் சம்மதமே…”

இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தால், கர்னாடக இசைப் பாடலின் தோற்றம் வந்திருக்கும்..

ராஜா வுக்கு தெரியாதா என்ன ?

ஆஷா போன்ஸ்லேயின் குரலில், ஒரு சில வார்த்தைகள் சொதப்பலாய் வருகிறது…தமிழ் பாடகியாய் இருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்குமோ…(ஆமா, இங்கே யாரு தமிழ்ப் பாடகி ? ஜானகி-தெலுங்கு, சுஜாதா,சித்ரா,சுவர்ணலதா-மலையாளம்…அனுராதா ஸ்ரிராம் -தமிழோ? )

Listen

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

-
வழியில் நிறுத்தி, ஒரு காஃபி வாங்கிக் கொள்கிறான்…

எந்த ஊரா இருந்தா என்ன, காலையிலெ ஒரு காஃபி குடிக்கிற பழக்கம் மட்டும் மாறாதே…

மீண்டு(ம்) வந்து தன் வண்டியைக் கிளப்புகிறான்…
சிடி தொடர்கிறது…அதே படத்தில் அடுத்த பாடலுடன்…

“மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே, (தனன தனனா)
பாட்டு வண்டியைத் தான் கூட்டிகிட்டு போவான்..(அட தனன தனன)

ஏழூரு கேட்குமய்யா இவனோட பாட்டு சத்தம்”

“எங்க ஊரு பாட்டுக்காரன் — அய்யா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…”

“அடேங்கப்பா…. நம்ம ஊருலே இது போல பாட்டுக்காரன் யாரு இருக்கா ?” குமார் யோசித்தான்…

உம்…நம்ம ஊருக்கு(ம்) இளையராஜா தான் பாட்டுக்காரன்…வேற யாரு ?

(மேலும் தொடரும் பயணம்…)

One Response to “எங்க ஊரு பாட்டுக்காரன்”

  1. 1 Kangson 19 Jun 2005 at 6:53 pm link to this comment

    உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. தொடருங்கள்…

Trackback URI | Comments RSS

Leave a Reply