அச்சமுண்டு அச்சமுண்டு – ஒரு பார்வை

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், “இன்று இப்படம் கடைசி” என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று அமர்ந்தேன்.

இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன்.

aa1 சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியை, ஒரு சினிமாவுக்குள், சினிமாத்தனங்கள் இல்லாமல் பதிவு செய்து இருக்கும் ஒரு நல்ல முயற்சி. உங்களுக்கு அருகாமையில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தால், கட்டாயம் சென்று பாருங்கள்.
இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

படத்தின் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும்,
1. சினேஹா, ப்ரசன்னா மற்றும் ஜான் ஷேயின் நடிப்பு
2. திறமையான இயக்கம்
3. கொடூரமான வில்லத்தனத்தையும் சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கும் காட்சியமைப்புகள்
4. படத்தின் மையக் கருத்து
போன்ற பல நல்ல விஷயங்களுக்காக அவசியம் பார்க்கவேண்டிய படம்.
படத்திற்கு கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55

உங்களால் முடிந்தவரை விரைவில் உதவுங்கள்

செந்தில்நாதன் என்பவர், சிங்கப்பூரில் இருதயக் கோளாறினால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உங்களால் முடிந்தவரை விரைவில் உதவுங்கள்.
Help Senthil Nathan!

Update on August 25th 2009:

“சிங்கை நாதனுக்கு உதவுங்கள்” என்று பதிவு போட்டு ஒரு வார காலத்தில் தேவைப்படும் பணத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு கிடைத்தது ஒரு சாதனை. இது வரையில் கிட்டத்தட்ட 75,000 SGD சேர்ந்த்திருக்கிறது. இதற்காக தங்களது சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து முகம் தெரியாத நண்பனுக்காக ஓடி ஓடி உழைத்த நல்ல உள்ளங்களை என்றும் நன்றியுடன் நினைத்துக்கொள்வோம்.

Update on Aug 28th 2009

செந்தில் நாதன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது.

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்ததில் பிடித்த பதிவுகளுக்கு இங்கே சில சுட்டிகள்…
சொக்கனின் ஏதாச்சும் ரெண்டு மிருகம் பதிவிலிருந்து….

இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.

சரவ்-வின் கவித! கவித!!.. படி!! பதிவிலிருந்து….

எட்டு கால்கள்
சுமந்த மேனி
எண்ணூறு கால்களில்

நீங்களும் படித்து மகிழுங்கள்.

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

நேற்று நடந்தது போல் இருக்கிறது
இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.

எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

நான் கடவுள் – என் எண்ணங்கள்

நான் கடவுள் ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக

  1. விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் சொல்லிய பாலாவின் நேர்த்தி
  2. மெல்லிய நகைச்சுவை இழையோடும் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை
  3. படம் முழுக்க வியாபித்திருக்கும் ராஜாவின் பொருத்தமான பின்னணியிசை
  4. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு
  5. கதாபாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிகர்கள் பூஜா, கோவை கிருஷ்ணமூர்த்தி['முருகன்' கதாபாத்திரம்], அறிமுக நடிகர் ராஜேந்திரன் [வில்லன் கதாபாத்திரம்]

என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.

நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
Read the rest of this entry »

நான் கடவுள் – இன்னும் சில தினங்களில்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, “நான் கடவுள்” திரைப்படம் இன்னும் சில தினங்களில் [ஃபிப்ரவரி 6 - வெள்ளியன்று] வெளியாகிறது.
மற்றவர்களின் விமர்சனம் எதுவும் வெளிவருவதற்கு முன் பார்த்துவிட ஆசை. பார்ப்போம்.

இப்போதைக்கு இதைப் படியுங்கள். பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.