ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு [aayiram aayiram gopiyargalodu]
சமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன்.
மிக அருமையான பாடல். சமீபத்தில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
எழுதியவர்: திரு.எம்.கே.தண்டபாணி பிள்ளை
முதலில் பாடிப் பிரபலமாக்கியது: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: சாருகேசி
தாளம்: ஆதி
ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு நடம்
ஆடி விளையாடி வரும் ஆனந்த கிருஷ்ணன்..(அவன்)
-
நேயமோடு என்னை அவன் நாடி வந்து நின்றிடுவான்
நீல வர்ணக் கண்ணன் அவன் கோலக் குழல் ஊதி நின்றான்…(ஆயிரம்…)
-
கொஞ்சும் சலங்கை ஒலிக்க வஞ்சியரின் வீட்டுத்
தயிர்ப் பாலை எல்லாம் உண்டு பசுபோலே ஒளிந்திடுவான்அஞ்சி நின்று அடியும் பட்டு அன்னையும் வியந்திடவே
அண்ட சராசரம் பவள வாயில் காட்டிடுவான்…(2)
(ஆயிரம் ஆயிரம்)
இது தான் ஓரளவுக்குச் சரியான பாடல் வரிகள், பாம்பே ஜெயஸ்ரீ பாடுவதில் சில வார்த்தைகளைத் தவறாக உச்சரிக்கிறார், இருந்தாலும் அவர் குரலினிமைக்காகவும், ராகானுபவத்திற்காகவும் ரசிக்கலாம். கீழே கிளிக்குங்கள்.
அனைவருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
நன்றி:
Aayiram Aayiram English Lyrics and Information
சாருகேசியில் அமைந்த பாடல்கள்



