ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு [aayiram aayiram gopiyargalodu]

aayiram-aayiram-gopiyargaloduசமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன்.
மிக அருமையான பாடல். சமீபத்தில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர்: திரு.எம்.கே.தண்டபாணி பிள்ளை
முதலில் பாடிப் பிரபலமாக்கியது: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: சாருகேசி
தாளம்: ஆதி

ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு நடம்
ஆடி விளையாடி வரும் ஆனந்த கிருஷ்ணன்..(அவன்)
-
நேயமோடு என்னை அவன் நாடி வந்து நின்றிடுவான்
நீல வர்ணக் கண்ணன் அவன் கோலக் குழல் ஊதி நின்றான்…(ஆயிரம்…)
-
கொஞ்சும் சலங்கை ஒலிக்க வஞ்சியரின் வீட்டுத்
தயிர்ப் பாலை எல்லாம் உண்டு பசுபோலே ஒளிந்திடுவான்

அஞ்சி நின்று அடியும் பட்டு அன்னையும் வியந்திடவே
அண்ட சராசரம் பவள வாயில் காட்டிடுவான்…(2)
(ஆயிரம் ஆயிரம்)

இது தான் ஓரளவுக்குச் சரியான பாடல் வரிகள், பாம்பே ஜெயஸ்ரீ பாடுவதில் சில வார்த்தைகளைத் தவறாக உச்சரிக்கிறார், இருந்தாலும் அவர் குரலினிமைக்காகவும், ராகானுபவத்திற்காகவும் ரசிக்கலாம். கீழே கிளிக்குங்கள்.

Listen to ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு

அனைவருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

நன்றி:
Aayiram Aayiram English Lyrics and Information
சாருகேசியில் அமைந்த பாடல்கள்

நெஞ்சுக்கு நீதி – குறும்படம்

சமீபத்தில் கலைஞர் தொ.காவில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது.
நளன் என்கிற ஓர் இயக்குனரின் “சீரியஸ் காமெடி”. மிகவும் ரசித்தேன். சமீபத்தில் YouTube இல் தென்பட்டது. முழுப்படமும் பத்து நிமிடங்களுக்கும் குறைவு தான் ஆனால் இரண்டு பாகங்களாக இருக்கிறது..
பார்த்து ரசியுங்கள்.
நெஞ்சுக்கு நீதி பாகம் 1 : 8 ஆவது நிமிடத்தில் தொடங்குங்கள்.

நெஞ்சுக்கு நீதி பாகம் 2

Jan 31, 2010 - நாட்டு நடப்புComments Off

பத்ம பூஷண் இளையராஜா!

Ilayaraaja -at a Press Meet
இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
அது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் கொடுத்தது நிருபர்களுடனான ஒரு சந்திப்பு. நான் கொடுப்பது இந்தப் பதிவு.

வாழ்த்துக்கள் ராஜா சார்!

[Ilayaraaja -at a Press Meet - படம் நன்றி: IndiaGlitz.com]

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

என் அப்பா தொடர்ந்து பல வருடங்கள், சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.
பக்தி என்றால் என்ன என்பதை வாழ்க்கையாக நடத்திக் காண்பித்த நாட்கள் அவை.

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் எழுதி இசையத்து, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள்.
இப்பவும் வரிகள் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்குப் பதிந்தவை.

காலங்கள் உருண்டோட, இப்போது அந்த ஒலிப்பேழைகள் போன இடம் தெரியவில்லை.
கடைகளில் கிடைக்குமா? தெரியவில்லை…

இன்று காலையில் ஏனோ “கார்த்திகை அதிகாலை நீராடி” பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
மதியம் கூகுளாண்டவரிடம் மன்றாடியதில் கடைசியாக அந்தப் பாடல் youtube-ல் தரிசனம்.

இப்போது அது உங்களுக்காக!
Read more »

பயிர் [payir.org] சமூக சேவை அமைப்பு

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவரும், நண்பருமான செந்தில் குமார் இந்தியாவில் நடத்தும் ஒரு சமூக சேவை அமைப்பு தான் “பயிர்”.
அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, அது வரை, பத்து வருடங்களில் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியா சென்றார்.
திருச்சி அருகில் உள்ள “தேனூர்” என்கிற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையமும் ஆரம்பித்து, அந்த ஊர் மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் இலவசமாய் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பேட்டி சமீபத்தில் விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. அதன் ஒளி ஒலிப்பதிவை இங்கே பதிவதில் எனக்கொரு பெருமை.

அவருக்கும் அவரது அமைப்புக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்ய, அவரது இணைய தளத்தைப் பாருங்கள்.

அச்சமுண்டு அச்சமுண்டு – ஒரு பார்வை

சமீபத்தில், நண்பர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் வெளியான, “அச்சமுண்டு அச்சமுண்டு” திரைப்படத்தை, திரையரங்கில் சென்று பார்த்தேன்.
வெளியான முதல் நாளிலேயே பார்த்திருக்க வேண்டியது, எப்படியோ தள்ளித் தள்ளிப் போய், “இன்று இப்படம் கடைசி” என்று தெரிந்தபிறகு கடைசி நாளில், குடும்பத்துடன் சென்று அமர்ந்தேன்.

இயக்குநர் எனக்குத் தெரிந்தவர் என்றாலும்,சமநிலையில் இருந்து இந்தத் திரைப்படத்தைக் குறித்த என் பார்வையைப் பதிகிறேன்.

aa1 சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியை, ஒரு சினிமாவுக்குள், சினிமாத்தனங்கள் இல்லாமல் பதிவு செய்து இருக்கும் ஒரு நல்ல முயற்சி. உங்களுக்கு அருகாமையில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தால், கட்டாயம் சென்று பாருங்கள்.
இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளியுங்கள்.

படத்தின் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும்,
1. சினேஹா, ப்ரசன்னா மற்றும் ஜான் ஷேயின் நடிப்பு
2. திறமையான இயக்கம்
3. கொடூரமான வில்லத்தனத்தையும் சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கும் காட்சியமைப்புகள்
4. படத்தின் மையக் கருத்து
போன்ற பல நல்ல விஷயங்களுக்காக அவசியம் பார்க்கவேண்டிய படம்.
படத்திற்கு கிறுக்கல்ஸ்.காம் வழங்கும் மதிப்பெண் : 55

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்ததில் பிடித்த பதிவுகளுக்கு இங்கே சில சுட்டிகள்…
சொக்கனின் ஏதாச்சும் ரெண்டு மிருகம் பதிவிலிருந்து….

இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.

சரவ்-வின் கவித! கவித!!.. படி!! பதிவிலிருந்து….

எட்டு கால்கள்
சுமந்த மேனி
எண்ணூறு கால்களில்

நீங்களும் படித்து மகிழுங்கள்.

மூன்றாம் ஆண்டாய் நினைவில் வாழும் அப்பா

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

பனி பெய்த ஒரு நாளில் அப்பாவுடன்

நேற்று நடந்தது போல் இருக்கிறது
இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.

எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…

Listen to

Close [X]