கே.ஜே.யேசுதாஸ் - தமிழ் சினிமா இசையில், தலைவர் ராஜா சார் மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் பல நல்ல பாடல்கள் இவர் குரல் வழி வந்து இருக்கின்றன.
“கண்ணே கலைமானே”, “அம்மா என்றழைக்காத”, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “மனிதா மனிதா இனி உன் விழிகள்”, என சொல்லிக் கொண்டே போகலாம்.
“ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது”
இவர் பாடிய “ஏழிசை கீதமே” என்ற பாடலின் வரிகள் இவை.
சமீபத்தில் இவரது ரசிகர் ஒருவரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தது. நீங்களும் படித்து ரசியுங்கள்.
Tags: கே.ஜே.யேசுதாஸ்
குணா - திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள்.
இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள்.
புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன.
சமீபத்தில் ரேடியோஸ்பதியின் வலைப்பதிவில், இந்த பதிவைப் படித்து, கேட்டு ரசித்தேன். நீங்களும் கேளுங்கள்.
குணா பின்னணி இசைத் தொகுப்பு.
Tags: இளையராஜா, கமல், குணா, பின்னணி இசை
சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் - சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் - என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”
பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது - இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில் - இளையராஜா
அழகான ராட்சசியே - முதல்வன் - ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் - தம்பி - வித்யாசாகர்
“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.
பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
Read the rest of this entry »
Tags: இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜேம்ஸ் வசந்தன், ரீதிகௌளை, வித்யாசாகர்
சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார்.
இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி.
அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.
எதேச்சையாக இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தது.
தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்.
கற்பனையான கடிதம் தான், ஆனால் நெகிழ வைத்தது.
இந்த வாரம் தேன் கிண்ணத்தில், ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒலிபரப்புவதாக அறிந்தேன்.
மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடி இருந்தாலும், தமிழ் சினிமாவின் சில சிறந்த பாடல்கள் இவர் குரல் வழி வந்திருக்கின்றன.
மென்மையான, நெஞ்சை வருடும் குரல் கொண்ட இவரின் பாடல்களை, இந்த வலைப்பதிவில் கேட்டு மகிழலாம்.
Tags: சினிமா, ஜெயச்சந்திரன்