எங்க ஊரு பாட்டுக்காரன்
காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார்.
அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில்.
திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும்.
நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்…
“பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…”
அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா போன்ஸ்லே தான்…
எதோ ஒரு மெல்லிய சோகம் கொண்டு [...]
