கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்
அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் இசையத்துப் பாடல்கள் எழுதி, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள். இப்பவும் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இன்றும் நெஞ்சில்.
கே.ஜே.யேசுதாஸின் ரசிகர் வலைப்பதிவு
கே.ஜே.யேசுதாஸ் – தமிழ் சினிமா இசையில், தலைவர் ராஜா சார் மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் பல நல்ல பாடல்கள் இவர் குரல் வழி வந்து இருக்கின்றன.
“கண்ணே கலைமானே”, “அம்மா என்றழைக்காத”, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “மனிதா மனிதா இனி உன் விழிகள்”, என சொல்லிக் கொண்டே போகலாம்.
“ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது”
இவர் பாடிய “ஏழிசை கீதமே” என்ற [...]
