கல்லூரி திரைப்படம் - பாலு மகேந்திரா கருத்து - என் பார்வை
சமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’.
சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார்.
பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த [...]
