வானத்தின் மேல் நின்று
(குமாரின் பயணம் தொடர்கிறது..)
குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை…
ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு…
இது அவனுக்கே அவனுக்கான நேரம்…
அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்..
சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும்.
சில பாடல்கள் மகிழ வைக்கும்,
சில அவனை நெகிழ வைக்கும்,
சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று)
மற்றும் சிலவோ அவன் இதயத்தை.
சமீபத்தில் ஒரு நாளில் அடிக்கடி Rewind ஆன பாடல் இது !
வானத்தின் மேல் [...]
