Archive for the Tag 'வைரமுத்து'

நதி எங்கே வளையும் - கரை ரெண்டும் அறியும்

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன்.
இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல்.
வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள்.

பாடல் வரிகளைப் பாருங்கள்.

நதி எங்கே வளையும், கரை ரெண்டும் [...]

இந்த வீணைக்குத் தெரியாது…

இரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது.
அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு.
வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்தால், வேறென்ன வேண்டும்.
கேளுங்கள், பாருங்கள்…

இதோ ஒரு வைர முத்து

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்


நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது

வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.
நினைவில் தங்கியதை எழுத்தில் பதிக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?