Archive for the 'என்னவென்று சொல்வது' Category

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள்.
அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

வரலாற்றுச் சுவடுகள் - இளையராஜா

தினத்தந்தி - நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.
இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அது இப்போது இங்கே உங்களுக்காக !

இந்த வீணைக்குத் தெரியாது…

இரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது.
அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு.
வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்தால், வேறென்ன வேண்டும்.
கேளுங்கள், பாருங்கள்…

தினம் ஒரு ஜென் கதை

இந்த தளத்தில் தினம் ஒரு ஜென் கதையை பிரசுரிக்கிறார்…
http://zendaily.blogspot.com
படித்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.