Archive for the 'என்னவென்று சொல்வது' Category

எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்

வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர்.
பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு.
ஒரே ஓர் உபரித் தகவல் : வலைப்பூ வடிவமைப்பு [...]

இன்று பிறந்த நாள் – இசையராஜா

இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள்
இசைஞானி திரு.இளையராஜா விற்கு
எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில.
1. கானா பிரபு – சில பாடல்களோடு
2. உன் இசை மீது ஒரு காதல்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள்.
அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா

தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.
இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அது இப்போது இங்கே உங்களுக்காக !

இந்த வீணைக்குத் தெரியாது…

இரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது.
அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு.
வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்தால், வேறென்ன வேண்டும்.
கேளுங்கள், பாருங்கள்…

தினம் ஒரு ஜென் கதை

இந்த தளத்தில் தினம் ஒரு ஜென் கதையை பிரசுரிக்கிறார்…
http://zendaily.blogspot.com
படித்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.