Archive for the 'பயனுள' Category

பயிர் [payir.org] சமூக சேவை அமைப்பு

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவரும், நண்பருமான செந்தில் குமார் இந்தியாவில் நடத்தும் ஒரு சமூக சேவை அமைப்பு தான் “பயிர்”.
அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, அது வரை, பத்து வருடங்களில் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியா சென்றார்.
அவரது பேட்டி சமீபத்தில் விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. அதன் ஒளி ஒலிப்பதிவை இங்கே பதிவதில் எனக்கொரு பெருமை.

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள்

ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள் இப்பொழுது புத்தக வடிவில்.
எளிதாக பிரதி எடுக்கும் வகையில்.
முதலில் தயாரித்தவர் : மதன் என்கிற ஒரு ரசிகர்.
இணையத்தில் பகிர்வது மட்டும் நான்.
திருவாசகம் புத்தக வடிவில்.
நன்றி.

எனக்கு நானே ஞாபகப் படுத்திக் கொள்ள

அடிக்கடி நமக்கு நாமே படித்துக்கொள்ள வேண்டிய மகாகவி பாரதியின் வரிகள் …
இந்த துளியை (பெரும் தமிழ் இணையத்தில் இது ஒரு துளி தானே) இத்துடன் துவக்குகிறேன்…
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ
- மகா கவி சுப்ரமணிய பாரதி