Archive for the 'அஞ்சலி' Category

சுஜாதா- ஒரு சகாப்தம்

சுஜாதா - என்கிற ரங்கராஜன் என்கிற, தமிழின் முக்கியமான எழுத்தாளர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் தூவிய எழுத்துக்கள் இன்றும் காற்றில் கலந்து இருக்கிறது.
வாசகனோடு இயல்பாய்ப் பேசும் எழுத்து நடை அவருடையது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகங்கள், இன்றும் பல மறு பதிப்புகளைக் காண்கிறது.
இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி வணங்கும், அவரை மதிக்கும் கோடிக் கணக்கான வாசகர்களில் ஒருவனான அடியேன்.

Protected: தந்தையர் தினம்

தந்தையர் தினம் - Father’s Day உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.
இந்த வருடம் ஜூன் 17 ஆம் தேதி வருகிறது.
நம் வீட்டிற்கு ஒரு தந்தையர் தினத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அது நம் அப்பா பிறந்த ஜூன் 15 ஆம் தேதியை வைத்துக் கொள்ளலாமே ?
1. எதற்காகக் கொண்டாட வேண்டும்?
நாம் நம் அப்பாவின் மீது கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் நம் சந்ததிகள் உணர்ந்து கொள்ள.
2. எப்படிக் கொண்டாட வேண்டும் ?
இது மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டியது. நம் அப்பா நம் கூட இருப்பார்கள். [...]

அப்பா யு ஆர் கிரேட்

அப்பா யு ஆர் கிரேட்…
உங்களுடைய அப்பா உங்களுக்கு கொடுத்தது பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல்…
எங்களுக்கு நீங்கள் கொடுத்தது, பெயருக்கு பின்னாலும் இரண்டு எழுத்து…B.E பட்டம்
அப்பா யு ஆர் கிரேட்…
உங்களைப் பள்ளியில் சேர்க்கவோ, படிக்க வைக்கவோ ஒருவரும் உதவியதில்லை…
ஒவ்வொரு நிலையிலும் எங்கள் படிப்புக்கு நீங்கள் காட்டிய அக்கறை தானே எங்களைப் படிக்க வைத்தது…
அப்பா யு ஆர் கிரேட்…
உங்களுக்கு என்று உதாரண புருஷர்கள் யாரும் ஊரில் இல்லை…
ஆபிஸ் முடிந்ததும் தண்ணியடித்து விட்டு அலம்பல் செய்யும் கும்பல் தான் உங்கள் உடன் [...]