ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு
சமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன்.
கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்
அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் இசையத்துப் பாடல்கள் எழுதி, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள். இப்பவும் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இன்றும் நெஞ்சில்.
காதல் என் வாழ்வில் – ரவி, ஹரி, சூப்பர் சிங்கர் 2008
சில வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 2008 [Super Singer 2008] நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பாடலை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருந்த, ரவி மற்றும் ஹரி [சகோதரர்கள்] பாடத் தொடங்க, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்.
What an excellent Composition!!!
இந்தப் பாடல், அவர்களே இயற்றி இசையமைத்த பாடல் என்பது தெரியாமல், உடனே இணைய வலையில் போய் “காதல் என் வாழ்வில்” என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒன்றும் அகப்படவில்லை. [ஒருவேளை எதிர்காலத்தில் யாரேனும் [...]
“பூ” – படத்தின் பாடல்கள்
எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும்.
இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.
கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ [kanden seethaiyai]
முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல்.
பாடல் : கண்டேன் சீதையை
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com
ராகம்: பாகேஸ்ரீ [Bageshri]
தாளம்: ஆதி [திஸ்ர நடை]
அனுமன் இலங்கை சென்று, சீதையைக் கண்டு திரும்பி வந்து ராமனிடம் சொல்வதைச் சொல்லும் பாடல். அனுமனின் வரவுக்கும், அவர் சொல்லப் போகும் செய்திக்குமாய், ராமனும் மற்றவர்களும் ஆவலாய்க் காத்திருக்கின்றனர். அவர்கள் ஆவலை உணர்ந்து, அனுமன் “கண்டேன்” [...]
எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ
அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன்.
இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம்.
பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho]
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
ராகம்: ஹுசைனி
இசைத்தொகுப்பு: அமிர்தம்
ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது இந்தப் பாடல்.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் உணர்வுகளைக் குழைத்து வரும் [...]
