காற்றில் வரும் கீதமே…
ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன்.
அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்….
சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ…
இசை : தலைவர் இளையராஜா
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும்.
என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தைக் கண்ணில் நிறுத்த வேண்டிய காட்சியமைப்பு….
இந்த பாடலின் ராகத்தில், தாராளமாக [...]
2005 - சில நினைவுகள் - பகுதி 1
இதோ வந்துவிட்டது 2006.
அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ?
இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில்.
5. ஐயங்காரு வீட்டு அழகே
படம்: அன்னியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
கேளுங்களேன்
4.மயிலிறகே மயிலறகே
படம்: அன்பே ஆருயிரே
பாடியவர்கள்: மதுஷ்ரி, நரேஷ் ஐயர்
இசை: A.R.ரெஹ்மான்
கேளுங்களேன்
3.காற்றில் வரும் கீதமே
படம் : ஒரு நாள் ஒரு கனவு.
பாடியவர்கள் : ஹரிஹரன், இளையராஜா, பவதாரிணி, ஷ்ரேயா கோஷல், [...]
வானத்தின் மேல் நின்று
(குமாரின் பயணம் தொடர்கிறது..)
குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை…
ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு…
இது அவனுக்கே அவனுக்கான நேரம்…
அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்..
சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும்.
சில பாடல்கள் மகிழ வைக்கும்,
சில அவனை நெகிழ வைக்கும்,
சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று)
மற்றும் சிலவோ அவன் இதயத்தை.
சமீபத்தில் ஒரு நாளில் அடிக்கடி Rewind ஆன பாடல் இது !
வானத்தின் மேல் [...]
இதோ ஒரு வைர முத்து
வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்
–
–
நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது
வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.
நினைவில் தங்கியதை எழுத்தில் பதிக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
எங்க ஊரு பாட்டுக்காரன்
காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார்.
அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில்.
திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும்.
நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்…
“பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…”
அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா போன்ஸ்லே தான்…
எதோ ஒரு மெல்லிய சோகம் கொண்டு [...]
