சமீபத்தில் ரசித்த பாடல்கள்
“ஏம்பா லேட்டஸ்ட்டா எத்தனையோ பாட்டு வந்துகிட்டு இருக்கே, அதுல உனக்கு பிடிச்ச பாட்டு பத்தி எழுதலாமுல்ல ?”
என்று நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட பல பேருக்காக என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், லிஸ்ட்டுக்குப் போயிடுறேன்.
பாடல் – குரல் – இசை – படம் என்ற வரிசையில் படிக்கவும்.
1. காற்றின் மொழி – பலராம் – வித்யாசாகர் – மொழி.
2. சஹானா தூரல் – உதித் நாராயண், சின்மயி. – ஏ.ஆர்.ரகுமான் – சிவாஜி
3. ஆசப் பட்ட எல்லாத்தையும் – ஹரிஹரன் [...]
நதி எங்கே வளையும் – கரை ரெண்டும் அறியும்
அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன்.
இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல்.
வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள்.
[Audio clip: view full post to listen]
பாடல் [...]
காற்றில் வரும் கீதமே…
ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன்.
அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்….
சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ…
இசை : தலைவர் இளையராஜா
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும்.
என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தைக் கண்ணில் நிறுத்த வேண்டிய காட்சியமைப்பு….
இந்த பாடலின் ராகத்தில், தாராளமாக [...]
2005 – சில நினைவுகள் – பகுதி 1
இதோ வந்துவிட்டது 2006.
அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ?
இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில்.
5. ஐயங்காரு வீட்டு அழகே
படம்: அன்னியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
கேளுங்களேன்
4.மயிலிறகே மயிலறகே
படம்: அன்பே ஆருயிரே
பாடியவர்கள்: மதுஷ்ரி, நரேஷ் ஐயர்
இசை: A.R.ரெஹ்மான்
கேளுங்களேன்
3.காற்றில் வரும் கீதமே
படம் : ஒரு நாள் ஒரு கனவு.
பாடியவர்கள் : ஹரிஹரன், இளையராஜா, பவதாரிணி, ஷ்ரேயா கோஷல், [...]
வானத்தின் மேல் நின்று
(குமாரின் பயணம் தொடர்கிறது..)
குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை…
ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு…
இது அவனுக்கே அவனுக்கான நேரம்…
அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்..
சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும்.
சில பாடல்கள் மகிழ வைக்கும்,
சில அவனை நெகிழ வைக்கும்,
சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று)
மற்றும் சிலவோ அவன் இதயத்தை.
சமீபத்தில் ஒரு நாளில் அடிக்கடி Rewind ஆன பாடல் இது !
வானத்தின் மேல் [...]
இதோ ஒரு வைர முத்து
வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்
–
–
நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது
வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.
நினைவில் தங்கியதை எழுத்தில் பதிக்கிறேன்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
