சுற்றம்

கே.ஜே.யேசுதாஸின் ரசிகர் வலைப்பதிவு

கே.ஜே.யேசுதாஸ் – தமிழ் சினிமா இசையில், தலைவர் ராஜா சார் மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் பல நல்ல பாடல்கள் இவர் குரல் வழி வந்து இருக்கின்றன.
“கண்ணே கலைமானே”, “அம்மா என்றழைக்காத”, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “மனிதா மனிதா இனி உன் விழிகள்”, என சொல்லிக் கொண்டே போகலாம்.

“ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது”

இவர் பாடிய “ஏழிசை கீதமே” என்ற பாடலின் வரிகள் இவை.

சமீபத்தில் இவரது ரசிகர் ஒருவரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தது. நீங்களும் படித்து ரசியுங்கள்.

சுற்றம்

ஜெயச்சந்திரனின் பாடல்கள்

இந்த வாரம் தேன் கிண்ணத்தில், ஜெயச்சந்திரனின் பாடல்களை ஒலிபரப்புவதாக அறிந்தேன்.
மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடி இருந்தாலும், தமிழ் சினிமாவின் சில சிறந்த பாடல்கள் இவர் குரல் வழி வந்திருக்கின்றன.
மென்மையான, நெஞ்சை வருடும் குரல் கொண்ட இவரின் பாடல்களை, இந்த வலைப்பதிவில் கேட்டு மகிழலாம்.

சுற்றம்

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு இந்த பதிவு.

எல்லோரும் இப்படித்தானா by கீதா.
மேகத்தை மூடும் மேகங்கள் by சேவியர்.
பொய் சொல்லக் கூடாது ஹிலாரி by சிறில் அலெக்ஸ்.
எவ்ளோ சம்பளம்? by சரவ்.

கிளிக்குங்கள் நேரமிருக்கும் போது.

சுற்றம்

படித்தில் பிடித்தது…

மீண்டும் சில சுட்டிகள். சமீபத்தில் படித்ததில் பிடித்தது.

  1. சேவியர் எழுதிய அறிவியல் புனைகதை ஏலி ஏலி லெமா சபக்தானி
  2. அரைபிளேடு எழுதிய கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி – குறும்பான முழு நீள கதை
  3. சரவ் எழுதிய திருமணம் 1.0