0

வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து

2010-இல் உலகம் எப்படியிருக்கும் என்று சில கற்பனைகளை, 2005-இல் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா..

2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.
புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்
– செல் ஃபோன்கள் இரட்டிப்பாகும்.
– மக்கள் தொகை 118 கோடியாகும்.
– —
– அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்ஃபோனில் செய்ய முடியும்.
– கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்.
– வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்
– புத்தகங்கள் குறையும்.
– மருத்துவமனைகளில் இடம் போதாது…
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.

முழுப் பட்டியல் இங்கே கிடைக்கும்.
வாவ்…He is such a genius!

sadish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *