Protected: தந்தையர் தினம்

தந்தையர் தினம் – Father’s Day உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

இந்த வருடம் ஜூன் 17 ஆம் தேதி வருகிறது.

நம் வீட்டிற்கு ஒரு தந்தையர் தினத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அது நம் அப்பா பிறந்த ஜூன் 15 ஆம் தேதியை வைத்துக் கொள்ளலாமே ?

1. எதற்காகக் கொண்டாட வேண்டும்?

நாம் நம் அப்பாவின் மீது கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் நம் சந்ததிகள் உணர்ந்து கொள்ள.

2. எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இது மகிழ்ச்சியாய்க் கொண்டாட வேண்டியது. நம் அப்பா நம் கூட இருப்பார்கள். ஒரு காந்தி ஜெயந்தி, ஒரு ராம நவமி, ஒரு வினாயகர் சதுர்த்தி போல, நம் வீட்டிற்கு இனி ஒவ்வொரு வருடமும் ஜூன் 15 தான் தந்தையர் தினம்.

நம் ஒவ்வொருவரும் சந்தோஷமான மனநிலையில் இந்த நாளை எதிர்கொள்ள வேண்டும்.
புத்தாடைகள், இனிப்புகள் எல்லாம் இருக்கலாம்.
இது நம் அப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

3. முக்கியமான நோக்கம் என்ன ?

அடுத்த தலைமுறைக்கு நாம் நம் அப்பாவைப் பற்றிச் சொல்வது.
இந்த நாளில், நாம் ஒவ்வொருவரும் இந்த நாளைக் கொண்டாடும்போது, பிள்ளைகள் நிச்சயமாய்க் கேட்கும் “எதற்கு இந்த விழா?” என்று.
அப்போது சொல்ல வேண்டும் “எங்கள் அப்பா தானே எங்களை எல்லோரையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினது. அவங்களாலே தானே நாம எல்லாரும் இன்னைக்கு நல்ல நிலமைல இருக்கோம். அதான் அவங்க பிறந்த நாளைக் கொண்டாடுறோம்.”
“தேசத் தந்தை காந்தியோட பிறந்த நாளைக் கொண்டாடுறோம் இல்லை. அது மாதிரி நம்ம வீட்டுத் தந்தை அவங்க தானே.”

இப்படி சொல்லிக் கொடுப்பதை நாம் இந்த வருடத்தில் இருந்தே செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
நம் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை என்றால் கூட.

4. இப்படி ஒரு நாள் இல்லையென்றால் நாம் சொல்லிக் கொடுக்கப் போவது இல்லையா என்ன?
இருக்கலாம். ஆனால் இந்த நாளில் கொண்டாடும் போது, கட்டாயம் அந்த கேள்வி குழந்தைகளிடம் வரும். கட்டாயம் அதற்கு பதிலும் கிடைக்கும்.


பாலகுமாரன் எழுதிய “அப்பம் வடை தயிர்சாதம்” என்கிற நாவலின் கதையை நினைவு படுத்துகிறேன்.
இப்பொழுது வாடும் ஓர் இளைஞனுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அமெரிக்கா போவதற்கு முன், மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் “அப்பம் வடை தயிர்சாதம்” னு கூவிக் கூவி விற்க வேண்டும் என அவன் குடும்பமே அவனை அழைத்துச் செல்கிறது. ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேற்றப் போவது போல எல்லோரும் கிளம்பிச் செல்கிறார்கள்.
அந்த இளைஞனின் அப்பா இன்று ஒரு பெரும் பணக்காரர். அவருக்குக் கீழே பல பேர் இன்று வேலை பார்க்கிறார்கள். இருந்தாலும் எல்லா பந்தாக்களையும் விட்டு விட்டு, ஒரு சாதாரண வியாபாரி போல “அப்பம் வடை தயிர்சாதம்” னு பொட்டலம் போட்டு விக்கிறாங்க.
அப்போ அந்தப் பையன் கேட்கிறான் “எதற்கு நாம் இப்படி செய்கிறோம்?” என்று.
அப்போ அவனுக்கு அந்த குடும்பத்தின் கதை சொல்லப் படுகிறது.
அவனுடைய தாத்தாவிற்கு தாத்தா, பிரிட்டிஷ் காலத்தில், வைதீகம் செய்து பிழைக்க முடியாத நேரத்தில், தன் குடும்பத்தைக் காப்பாற்ற, எவ்வளவு கஷ்டப்பட்டு, “அப்பம், வடை தயிர்சாதம்” சமைத்துப் பொட்டலம் கட்டி, ரயில்வே ஸ்டேஷனில் கூவிக் கூவி விற்றார் என்பது அவனுக்கு விளக்கப் படுகிறது.

sadish