0

சர சர சாரக் காத்து…sara sara saara kaathu

சமீபத்தில் வரப்போகும் ‘வாகை சூட வா” திரைப்படத்திற்காக, வைரமுத்துவின் வரிகள், அறிமுக இசையமைப்பாளர் எம்.கிப்ரனின் இசையில், சின்மயியின் இனிய குரலில் வந்திருக்கும் சிறப்பான பாடல்.

கதாநாயகியிடம் இருக்கும் ஒரு குறும்பு மற்றும் காதலை, கிராமிய மணத்துடன் வெளிக்கொணர்ந்த வைரமுத்துவின் வரிகள் சிறப்பானவை. இந்தப் பாடல் குறித்து சின்மயி அவரது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பல இடங்களில் இதன் தங்கிலீஷ் லிரிக்ஸ் காணப்பட்டது. அதைத் தமிழில் கொடுக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆனாலும் சில வார்த்தைகள் சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் கமெண்டுங்கள்.

சர சர சாரக் காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும்போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே…(2)

இத்து…இத்து இத்துப் போன நெஞ்சைத் தைக்க
ஒத்தப் பார்வ பாத்துச் செல்லு
மொத்த சொத்தும் எழுதித் தாரேன்
மூச்சு உட்பட…(2)

டீ…. போல நீ என்னை ஏன் ஆத்துறே…
(சர சர)
எங்க ஊரு பிடிக்குதா…எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல…சுட்ட ஈரல் மணக்குதா
முட்ட கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புகள் கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா?

கம்பஞ்சோறு ருசிக்க வா…சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடைக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோச சுட்டு வச்சி காவ காக்குறேன்..
முக்கண்ணு நுங்கு நான் விக்குறேன்
மண்டு நீ கங்கே(kangu) ஏன் கேக்குறே?

(சர சர)
புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ளே வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுறே கையளவு மனசுலே
கையெழுத்துப் போடுற கன்னிப் பொண்ணு மார்புல

மூனு நாளாப் பாக்கல…ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போவும் பூனைய்யா…
வந்து வந்து பாத்து தான் கிறங்கிப் போறேன்யா…

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல மக்கு நீ…
(சர சர)

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காச்சலா…

sadish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *