நான் பாடிய பாடல்

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் …

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் பாடிய பாடல் இது. எழுதியது அறிவுமதி.

நண்பர் கானா பிரபா, தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த மாதம் தான் இந்த பாடலை முதன் முறையாகக் கேட்டேன்.

கேட்ட பொழுதில் இருந்து, தினமும் என் காதுகளுக்கு அள்ளி அள்ளி ஊற்றியதில் இதன் வரிகள், மனதில் பதிந்து போனது. பின்னர் ஸ்ம்யூல் என்கிற கைப்பேசிக்கான செயலியில் இதனை என் குரலில் பாடிப் பதிந்தேன். அதனைக் கீழே உள்ள காணொளியில் கண்டு ரசியுங்கள்.

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்
உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்
பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......

பாடல் பிடித்து இருந்தால், கீழே உள்ள இடத்தில் கமெண்ட்டுங்கள்.

நான் பாடிய பாடல்

மேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் என்னுடைய சில பாடல்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
சமீபத்தில், அட்லாண்டா மாநகரில் நிகழ்ந்த ஒரு தன்னார்வத் தொண்டர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் என்னைப் பாட அழைத்து இருந்தனர்.


அப்போது, ராஜா சாரின் இந்த இனிமையான பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இங்கே கீழே. பார்த்து மகிழுங்கள். என்னுடன் இணைந்து பாடியவர்,  பரிமளா.

கேளடி கண்மணி படத்திற்காக, கே.ஜே.யேசுதாஸும் உமா ரமணனும் பாடியது.

இதே நிகழ்வில், மரகதமணி அவர்களின் இசையில், அழகன் திரைப்படத்தில் வந்த ‘சாதி மல்லி பூச்சரமே’ பாடலையும் பாடினேன். படத்தில் எஸ்.பி.பி அவர்கள் பாடியது.
அதன் காணொளி இங்கே.

இதற்கு முன்னால், ஃபெப்ரவரி மாதத்தில், எங்கள் குழுவின் மாதாந்திர சந்திப்பில், டி இமானின் இசையில் பிரதீப் குமார் பாடிய ‘அம்முக் குட்டியே’ பாடலைப் பாடினேன். அதுவும் நண்பர்கள் மிகவும் ரசித்துக் கேட்டனர். அதன் காணொளி இங்கே.

ரசித்து மகிழ்ந்தாலும், இல்லையென்றாலும் கமெண்ட்டுங்கள்.

நான் பாடிய பாடல் · பிடித்த பாடல்

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்…


திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள்.

இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது.

தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம்.
அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், ராஜா சார் திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களுக்கு இசை சேர்த்து உலவ விடுகிறார்.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

Project Madurai என்கிற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஒன்றிரண்டு முறை கேட்டாலே பாடலின் பொருள் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.

நான் படித்துப் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
“செங்கமல மலர் போன்ற அழகான சிவபெருமானே, நான் உன் அடியவர்களைப் பார்க்கிறேன்.
உன் காலடியில் சேர்த்துக் கொள் என உன் மீது பைத்தியமாய் ஆகி, பிதற்றி உழல்கிறார்கள்.
நான் அந்த அளவுக்கு இன்னும் பண்படவில்லை;பற்றில்லாதவனாய் ஆகவில்லை; பணிவு என்னிடம் இல்லை.
ஆனாலும் நானும் உன் அடியார்கள் கூட்டமாய் நிற்கின்ற இந்த இடத்திலே, அவர்களுள் ஒருவன் போல ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். நீ அவர்களுக்கெல்லாம் அருளும் வேளையில் அப்படியே எனக்கும் முக்தியைக் கொடுத்துவிடேன். முத்து போன்றவன் நீ, நல்ல மணி போன்றவன் அல்லவா, தயவு செய்து எனக்கும் சேர்த்து அருள் செய்துவிடேன்…”

இசைஞானியின் இசைக்கு, என் புகழாரம் தேவையில்லை. சத்யபிரகாஷ் மற்றும் சுர்முகிக்கு நம் பாராட்டுகளைப் பகிர வேண்டும். இசைக்கும், பாடலின் பொருளுக்கும் சிறிதும் குறையில்லாது பாடி இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பர் (அவர் பெயரே சிவக்குமார், சிவ பக்தர் தாம்) இந்தப் பாடலை என் குரலில் பதிவு செய்ய உதவினார். கீழே இருப்பது அதே பாடல் என் குரலில்.

கேளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். நன்றி.

 

நான் பாடிய பாடல்

மேலும் சில பாடல்கள் – என் குரலில்

பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள்.

பாடும் வானம்பாடி ஹா… நான் பாடும் பாடல்…

அடியே என்ன ராகம்… ரம்மி

பட்டு வண்ண சேலைக்காரி… எங்கேயோ கேட்ட குரல்

இளஞ்சோலை பூத்ததா… பாடும் வானம்பாடி

நான் பாடிய பாடல்

நானும் ஒரு பாடகன் – இந்த முறை (2013)

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “நம்ம ஊரு சிங்கர்ஸ்”-இல், நானும் ஒரு பாடகன் என பங்கு கொண்டேன்.

அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி.

போற்றிப் பாடடி பொண்ணே – தேவர் மகன் – கிராமியப் பாடல்கள் சுற்று Folk Songs Round

விழி மூடி யோசித்தால் – அயன் – மேற்கத்தியப் பாடல்கள் சுற்று Western Songs Round

அம்மா என்றழைக்காத – மன்னன் – பாரம்பரிய இசைப் பாடல்கள் சுற்று Classical Songs Round

தேனே தென்பாண்டி மீனே – உதய கீதம் – காதிற்கினிய கீதங்கள் சுற்று Melody Songs Round

நான் பாடிய பாடல்

நானும் ஒரு பாடகன்

சின்ன வயதில், குளியலறைப் பாடகனாய்த் தொடங்கி, கல்லூரி நாட்களில் ஓரிரு முறை மேடையேறிய அனுபவம் உண்டு.
என்னை மிகவும் நெருக்கமாய் அறிந்தவர்களுக்கு நான் பாடுவேன் என்று தெரியும்.
ஒரு சில நாட்களில், நண்பர்களின் சந்திப்புகளில் பாடியிருக்கிறேன்.

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “சூப்பர் சிங்கர் 2012”-இல், நானும் ஒரு பாடகன் என என் பெயரைக் கொடுத்தேன்.
குரல் தேர்வுச் சுற்றைத்(Audition) தாண்டி, கிராமியப் பாடல்கள் சுற்றையும்(Folk Songs) தாண்டி, காதிற்கினிய கானங்கள்(Melody Songs) சுற்று வரை வந்தேன்.
அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி.
குரல் தேர்வுச் சுற்று.


கிராமியப் பாடல்கள் சுற்று.

காதிற்கினிய கானங்கள் சுற்று