சென்ற செவ்வாய்க்கிழமை, எங்களின் இரண்டாவது மகள், அஞ்சனா G சதீஷ், நலமாய்ப் பிறந்தாள். வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

Category: என்னவென்று சொல்வது
சமீபத்தில் படித்ததில் பிடித்தது
சமீபத்தில் படித்ததில் பிடித்த பதிவுகளுக்கு இங்கே சில சுட்டிகள்…
சொக்கனின் ஏதாச்சும் ரெண்டு மிருகம் பதிவிலிருந்து….
சரவ்-வின் கவித! கவித!!.. படி!! பதிவிலிருந்து….
நீங்களும் படித்து மகிழுங்கள்.
தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கிறுக்கல்ஸ்.காம் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் …
ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.
ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை நிறைந்து இருக்கிறது. இதற்கு மேல் எவ்வளவு ஊற்றினாலும் அது தங்காது. வழிந்து வெளியேறிவிடும்.” என்கிறார்.
துறவி நிதானமாக “நீயும் இந்தக் கோப்பை போல தான் இருக்கிறாய்; முதலில் உன் கோப்பையைக் காலியாக்கு, அதற்குப் பின் நாம் ஜென் பற்றிப் பேசுவோம்” என்கிறார்.
இதைப் படித்துக் கொஞ்ச நேரத்தில், யதேச்சையாய், ராஜா சார், கல்கி இதழுக்கு, 1997-இல் கொடுத்த ஒரு பேட்டியின் PDF வடிவத்தைப் படிக்க நேர்ந்தது.
அதில் ராஜா சார் இந்தக் கதையின் சாரத்தையே குறிப்பிடுகிறார்.
சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால் தானே நான் அதில் ஏதாவது போட முடியும்?
நீங்கள் கொண்டுவருகிற போதே, அதில் எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டுவருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப் போட முடியும்?
முழுப் பேட்டியையும் படிக்கக் கீழே கிளிக்குங்கள்.
கல்கியில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டி – PDF வடிவில்.
சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் …
சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.
இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்து இருந்தது. அதனால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, தேடிப் பிடித்து, எக்மோரில் ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்ததாய் ஞாபகம்.
இடைவேளையைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பச்சை நிற உடையில், மன நோயாளிகள் நிறைந்த அந்த மடத்தினுள்ளே நம்மை நடத்திச் செல்லும் காமரா. அப்போது ஆரம்பிக்கும் தலைவர் குரலில் அந்தப் பாடல், “எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவார்….”
நெஞ்சைப் பிசையும் பாடல்-னு சொல்லுவாங்களே, அந்த வகைல நம்பர் ஒன் அது.
எங்கே செல்லும் இந்தப் பாதை
[audio:enge-sellum.mp3]
அதே மாதிரி பிதாமகன் படத்தில், பின்னணி இசையில் சேர்க்கப்பட்ட பாடல் தான் “யாரது யாரது மனசத் திறந்தது..திறந்தது…” உருக்கிவிடும் கேட்பவரை. கேட்டுப் பாருங்கள்.
பிதாமகன் பின்னணி இசைப் பாடல்
[audio:yaarathu.mp3]
இது போல ஏதாச்சும் ஒன்று கட்டாயம் இருக்கும் “நான் கடவுள்” ல. சரியா?
சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி
சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார்.
இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி.
அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.
எனக்குத் தெரிந்த தமிழ்ப் பட இயக்குனர்
வலைப்பதிவின் மூலம் அறிமுகமான நண்பர், திரு.அருண் வைத்யநாதன், இப்போது ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர்.
பிரசன்னா, ஸ்னேகா நடிக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்த தகவல்களை மக்களுக்கு, நேரடியாகவே ஒரு வலைப்பூ மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் உருவாகும் கதையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
படியுங்கள் : அருண் வைத்யநாதன் On அச்சமுண்டு அச்சமுண்டு.
ஒரே ஓர் உபரித் தகவல் : வலைப்பூ வடிவமைப்பு செய்தது அடியேனும் என் மனைவியும் 🙂
இன்று பிறந்த நாள் – இசையராஜா
இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள்
இசைஞானி திரு.இளையராஜா விற்கு
எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில.
1. கானா பிரபு – சில பாடல்களோடு
2. உன் இசை மீது ஒரு காதல்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் உளங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் மகள் பிறந்த போது, என் மனைவி அருகில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உலகத்தின் எல்லா தாயும் [என்னுடைய மற்றும் உங்களுடைய] வணக்கத்திற்குரியவர்கள்.
அன்னையர் தினத்திற்கான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
வரலாற்றுச் சுவடுகள் – இளையராஜா
தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.
இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.