நெஞ்சுக்கு நீதி – குறும்படம்

சமீபத்தில் கலைஞர் தொ.காவில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது.
நளன் என்கிற ஓர் இயக்குனரின் “சீரியஸ் காமெடி”. மிகவும் ரசித்தேன். சமீபத்தில் YouTube இல் தென்பட்டது. முழுப்படமும் பத்து நிமிடங்களுக்கும் குறைவு தான் ஆனால் இரண்டு பாகங்களாக இருக்கிறது..
பார்த்து ரசியுங்கள்.
நெஞ்சுக்கு நீதி பாகம் 1 : 8 ஆவது நிமிடத்தில் தொடங்குங்கள்.

நெஞ்சுக்கு நீதி பாகம் 2

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

அப்பா,
எங்கள் உள்ளத்தில் வாழ ஆரம்பித்து, இன்றோடு நான்கு ஆண்டுகள்…
இன்றல்ல நேற்றல்ல எப்போதும் உங்கள் நினைவில் வாழ்கிறோம்.

செந்தமிழ்த் தேன் மொழியாள் – எனது குரலில்

சென்ற வாரம் நண்பன் எட்வின் வீட்டில், ஈஸ்டர் கொண்டாடிய போது, நான் பாடிய ஒரு பாடல். கேட்டு அல்லது சிரித்து மகிழுங்கள்…..

பத்ம பூஷண் இளையராஜா!

Ilayaraaja -at a Press Meet
இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய அரசு, பத்மபூஷண் விருதினை வழங்கி, விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
அது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் கொடுத்தது நிருபர்களுடனான ஒரு சந்திப்பு. நான் கொடுப்பது இந்தப் பதிவு.

வாழ்த்துக்கள் ராஜா சார்!

[Ilayaraaja -at a Press Meet - படம் நன்றி: IndiaGlitz.com]

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

என் அப்பா தொடர்ந்து பல வருடங்கள், சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.
பக்தி என்றால் என்ன என்பதை வாழ்க்கையாக நடத்திக் காண்பித்த நாட்கள் அவை.

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் எழுதி இசையத்து, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள்.
இப்பவும் வரிகள் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்குப் பதிந்தவை.

காலங்கள் உருண்டோட, இப்போது அந்த ஒலிப்பேழைகள் போன இடம் தெரியவில்லை.
கடைகளில் கிடைக்குமா? தெரியவில்லை…

இன்று காலையில் ஏனோ “கார்த்திகை அதிகாலை நீராடி” பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
மதியம் கூகுளாண்டவரிடம் மன்றாடியதில் கடைசியாக அந்தப் பாடல் youtube-ல் தரிசனம்.

இப்போது அது உங்களுக்காக!
Read the rest of this entry »

பயிர் [payir.org] சமூக சேவை அமைப்பு

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்தவரும், நண்பருமான செந்தில் குமார் இந்தியாவில் நடத்தும் ஒரு சமூக சேவை அமைப்பு தான் “பயிர்”.
அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, அது வரை, பத்து வருடங்களில் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்தியா சென்றார்.
திருச்சி அருகில் உள்ள “தேனூர்” என்கிற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையமும் ஆரம்பித்து, அந்த ஊர் மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் இலவசமாய் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பேட்டி சமீபத்தில் விஜய் டி.வியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பானது. அதன் ஒளி ஒலிப்பதிவை இங்கே பதிவதில் எனக்கொரு பெருமை.

அவருக்கும் அவரது அமைப்புக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்ய, அவரது இணைய தளத்தைப் பாருங்கள்.