இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள்
இசைஞானி திரு.இளையராஜா விற்கு
எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில.
1. கானா பிரபு – சில பாடல்களோடு
2. உன் இசை மீது ஒரு காதல்.
இன்று 65ஆவது பிறந்த நாள் காணும் எங்கள்
இசைஞானி திரு.இளையராஜா விற்கு
எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எத்தனையோ கோடி நெஞ்சங்கள் சேர்ந்து வாழ்த்தும், அவற்றுள் சில.
1. கானா பிரபு – சில பாடல்களோடு
2. உன் இசை மீது ஒரு காதல்.
ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல்.
ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல்.
பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல்.
முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே பாடுவது போலத் தொடங்குகிறது பாடல். அவர் கண்களில், நீல வண்ணக் கண்ணன் குழலோடு தோன்றி, அவரை “வா” என அழைக்கும் காட்சி தெரிகிறது. மாசில்லாத தூயனுடன் கலக்கும் ஆவல், அவர் குரலில் வெளிப்பட, மென்மையாகப் பாடலைத் தொடங்க “கே.ஜே.யேசுதாஸ்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.
கண்ணனின் குழலோசைக்குப் பிறகு பாடல் தொடங்குகிறது.
அழைக்கிறான் மாதவன்…ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயிலறகும்
எதிர்வரவும் துதிபுரிந்தேன்…
மாதவா…
கேசவா…
ஸ்ரீதரா…
ஓம்…
இப்போது தான் பாடலில் தாள இசை சேர்கிறது.
அதுவும் சீரான, சற்றே அதிக இடைவெளியில், இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட ஒரு வாழ்வைக் குறிப்பால் சொல்லும் ஒரு தாளம்.
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
வாடினேன் வாசு தேவா…வந்தது நேரமே…
ஞான வாசல் நாடினேன்.
வேத கானம் பாடினேன்
கால காலம் நான் உனைத்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்…
வேணு கானம் – என்றாலே குழலிசை தானே, அதுதான் ராஜா சார் அங்கே ஒரு சின்னத் துளியாக மெல்லிய குழலோசையை வைத்து இருக்கிறாரோ?
கண்ணில் நான் கண்டது…கண்ணன் பிருந்தாவனம்
மாயனே!
நேயனே!
மாசில்லாத தூயனே..
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே
இதற்குப் பிறகு ஸ்ரீராகவேந்திரர் இறைவனுடன் ஒன்ற, அவரது சீடர்கள் பாடுவதாகப் பாடல் தொடர்கிறது.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இருந்த மெல்லிய உறவைச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், இப்போது சீடர்களுக்கும் குருவிற்கும் இடையேயான பந்தத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
முதலில் அவர் அருகில் இருக்கும் சீடர்கள் பாடுகிறார்கள். இதற்கு கணிரென்ற குரலுடைய “டி.எல்.மஹாராஜன்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
இதற்கிடையில், மற்றொரு சீடர் [படத்தில் டெல்லி கணேஷ்], முக்தி நிலை அடைவதற்குள் தன் குருவைத் தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பாதையில் சில தடங்கல்கள் நேர்கிறது. அதையெல்லாம் தாண்டி எப்படியாவது குருவைத் தரிசிக்க வேண்டுமே என்கிற பதட்டத்துடன் இருக்கிற இந்த சீடரின் உணர்வைச் சொல்ல ஆரம்பிக்கிறது பாடல்.
ராஜா சார் எத்தனையோ திரைப்படக் காட்சிகளுக்குப் பின்னணி இசை சேர்த்துக் காட்சியில் கதா பாத்திரங்களின் உணர்வை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அது அவருக்கு சர்வ சாதாரணம்.
ஆனால் ஒரே பாடலில் இப்படிப் பல உணர்வுகளைக் காட்டுவது சற்று கடினம் தானே.
யேசுதாஸில் தொடங்கி, டி.எல்.மஹாராஜன் பாடும் போதே பாடல் சற்றே உயர்ந்த ஸ்தாயிக்குச் சென்று இருக்கிறது.
இப்போது அது இன்னும் உச்ச ஸ்தாயிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த சீடர் குரலாய் ஒலிக்க வேறொருப் பாடகரும் வேண்டும்.
இதற்கு ராஜா சார் தேர்ந்தெடுப்பது “மலேசியா வாசுதேவன்”.
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…
காட்சிகள் மாறி, திரும்பவும் ஸ்ரீராகவேந்திரர் இருக்கும் இடத்துக்கு வருகிறோம். சீடர்கள் உச்ச ஸ்தாயியில் தங்கள் குருவின் பெயரை மந்திரம் போல உச்சரிக்கிறார்கள்.
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…
உணர்வுகளை இசையில் கொண்டுவருவதில் ராஜா ராஜா தான். என்ன சொல்கிறீர்கள்?
பாடலைக் கேட்க கீழே க்ளிக்குங்கள்..
[audio:SriRaghavendra-Thedineindevadeva.mp3]
படத்துடன் பார்க்க கீழே க்ளிக்குங்கள்…
YouTube – தளத்தில் ஏற்றிய செந்திலுக்கு நன்றி.
Continue reading “தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்”
ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும்.
ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா?
அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே?
🙂
அதான் இல்லை.
என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார்.
அப்போ இந்தியாவின் பிரதமரா இருந்த “ஜவஹர்லால் நேரு” இறந்து விட்ட சமயம்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் பாடல் எழுதி இருக்கிறார்.
சீறிய நெற்றி எங்கே
சிவந்த நல்லிதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை தான் போனதெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்த நன்னடைதான் எங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே..
இந்த பாட்டுக்குத் தான் ராஜா சார், முதல் முதலா இசை அமைச்சிருக்கார்.
பாடலைக் கேட்கணும்-னு உங்களுக்கும் ஆர்வமாய் இருக்குமே? கீழே கிளிக்குங்கள்.
நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது.
சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும்.
நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993 அல்லது 1994ஆம் வருடம்.
அப்பொழுதுதான் முதன்முறை இந்தப் பாடலைக் கேட்டோம். கேட்டவுடனே மனதை மயக்கும் ஒரு தெய்வீகத் தன்மை அதில் இருந்தது. இது சினிமாப் பாடல் என நினைக்கவே இல்லை. பாம்பே ஜெயஸ்ரீயின் ஏதோ ஓர் ஆல்பம் என்று தான் நினைத்து இருந்தோம். அங்கே உள்ள சர்வரைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டோம் இது “வியட்னாம் காலனி” படப் பாடல் என்பதை.
அப்போதும் எங்களுக்குத் தெரியாது, இது தலைவரின் (இளையராஜா) மற்றுமொரு படைப்பு என்று.
என்ன ஒரு குழைவு. என்ன ஒரு பிர்க்கா… மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி செல்லும் ஒரு நதியின் லாவகம்.
அதில் ஒரு வரி. அதை எழுத்தில் சொன்னால்,
“உன் கோயில் எங்கும் நாதஸ்வரங்கள் கேட்கும்” என்று எழுதலாம், ஆனால் அது முழுமையாகச் சொல்வதாகாது.
பாடலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்.
[audio:https://kirukkals.com/wp-content/uploads/2007/05/kaiveenaiyai-yendhum-viyatnamcolony.mp3%5D
தினத்தந்தி – நாளிதழில் “வரலாற்றுச் சுவடுகள்” என்னும் பகுதி, கலையுலகின் சாதனையாளர்களின் வரலாற்றை மிக அழகாகத் தந்து வருகிறது.
இதில் நம் தலைவர் இளையராஜாவைப் பற்றி எழுதப்பட்ட அனைத்துப் பகுதிகளையும், சக இளையராஜா ரசிகர் C R வெங்கடேஷ் PDF வடிவத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன்.
அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்….
சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ…
இசை : தலைவர் இளையராஜா
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும்.
என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தைக் கண்ணில் நிறுத்த வேண்டிய காட்சியமைப்பு….
இந்த பாடலின் ராகத்தில், தாராளமாக எந்த கடவுளுக்கும் பாடல் எழுதிப் பாடலாம்…அப்படி ஒரு தெய்வாம்சம் இதில் உணர்கிறேன்…
நீங்களும் கேட்க, கீழே க்ளிக்குங்களேன்…
[audio:Hariharan-SGoshal-Bhava-Katril-Varum.mp3]ராஜாவின் திருவாசகம் பாடல் வரிகள் இப்பொழுது புத்தக வடிவில்.
எளிதாக பிரதி எடுக்கும் வகையில்.
முதலில் தயாரித்தவர் : மதன் என்கிற ஒரு ரசிகர்.
இணையத்தில் பகிர்வது மட்டும் நான்.
நன்றி.
காலை நேரத்தில் அலுவலகம் நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான் குமார்.
அமெரிக்காவின் நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில்.
திடீரென்று குறுக்கே வரப் போவதில்லை எந்த ஆட்டோக்காரனும். பின்னால் இருந்து ஹாரன் அடிக்க போவதில்லை யாரும்.
நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, காரின் சிடி ப்ளேயரைத் தட்டி விடுகிறான்…
“பூ வைச்சி பொட்டும் வைச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட எங்கே அந்த சந்தோஷம்…”
அது ஆஷா போன்ஸ்லெ வா, லதா மங்கேஷ்கரா ?உம்ம்ம்…ஆஷா போன்ஸ்லே தான்…
எதோ ஒரு மெல்லிய சோகம் கொண்டு வருவதற்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட குரலோ ?
“ராசாவே உன்னைத் தொட்டு நானும் வாழ மாட்டேனா
என் வீட்டுக்காரர் பாட்டும் காதில் கேட்க மாட்டேனா ”
இழைந்தோடுகிறது இன்னிசை…
ஒரு ஏக்கம் தொனிக்கும் பாடல்… பாடலின் இசை மட்டுமல்ல…வரிகளும் சேர்ந்து தான் இந்த தாக்கத்தை தர முடியும்…தனக்குள் நினைத்துக் கொள்கிறான்…
பாடலைக் கேட்ட எந்த ராசனும் கொஞ்சமாவது இரங்கியே ஆக வேண்டும்…
மீண்டும் பல்லவிக்கு வருகிறது பாடல்…
“செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே
செர்ந்திருந்தால் சம்மதமே…”
இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தால், கர்னாடக இசைப் பாடலின் தோற்றம் வந்திருக்கும்..
ராஜா வுக்கு தெரியாதா என்ன ?
ஆஷா போன்ஸ்லேயின் குரலில், ஒரு சில வார்த்தைகள் சொதப்பலாய் வருகிறது…தமிழ் பாடகியாய் இருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்குமோ…(ஆமா, இங்கே யாரு தமிழ்ப் பாடகி ? ஜானகி-தெலுங்கு, சுஜாதா,சித்ரா,சுவர்ணலதா-மலையாளம்…அனுராதா ஸ்ரிராம் -தமிழோ? )
Listen
[audio:senbagame.mp3]
–
வழியில் நிறுத்தி, ஒரு காஃபி வாங்கிக் கொள்கிறான்…
எந்த ஊரா இருந்தா என்ன, காலையிலெ ஒரு காஃபி குடிக்கிற பழக்கம் மட்டும் மாறாதே…
மீண்டு(ம்) வந்து தன் வண்டியைக் கிளப்புகிறான்…
சிடி தொடர்கிறது…அதே படத்தில் அடுத்த பாடலுடன்…
“மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே, (தனன தனனா)
பாட்டு வண்டியைத் தான் கூட்டிகிட்டு போவான்..(அட தனன தனன)
ஏழூரு கேட்குமய்யா இவனோட பாட்டு சத்தம்”
“எங்க ஊரு பாட்டுக்காரன் — அய்யா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…”
“அடேங்கப்பா…. நம்ம ஊருலே இது போல பாட்டுக்காரன் யாரு இருக்கா ?” குமார் யோசித்தான்…
உம்…நம்ம ஊருக்கு(ம்) இளையராஜா தான் பாட்டுக்காரன்…வேற யாரு ?
(மேலும் தொடரும் பயணம்…)