2

அம்மா – சில நினைவுகள்

அம்மாவுடன் நான்

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி எழுத நினைக்கிறேன்.கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னையில் இருந்து அண்ணனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.அம்மா நம்மை விட்டுப் பிரிந்தார் என்கிற செய்தியோடு.உடனே அவசரமாக அடுத்த விமானத்திலேயே அட்லாண்டாவில் இருந்து கிளம்பி சென்னை வந்து, சுவாமிமலைக்குச் சென்றோம். அடுத்த விமானத்திலேயே வந்தாலும்,… Continue Reading

0

என்ன குறையோ என்ன நிறையோ

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் பாடிய பாடல் இது. எழுதியது அறிவுமதி.

நண்பர் கானா பிரபா, தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த மாதம் தான் இந்த பாடலை முதன் முறையாகக் கேட்டேன்.

கேட்ட பொழுதில் இருந்து, தினமும் என் காதுகளுக்கு அள்ளி அள்ளி ஊற்றியதில் இதன் வரிகள், மனதில் பதிந்து போனது. பின்னர் ஸ்ம்யூல் என்கிற கைப்பேசிக்கான செயலியில் இதனை என் குரலில் பாடிப் பதிந்தேன்.

Continue Reading

0

மேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் என்னுடைய சில பாடல்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமீபத்தில், அட்லாண்டா மாநகரில் நிகழ்ந்த ஒரு தன்னார்வத் தொண்டர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் என்னைப் பாட அழைத்து இருந்தனர். அப்போது, ராஜா சாரின் இந்த இனிமையான பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இங்கே கீழே. பார்த்து மகிழுங்கள். என்னுடன்… Continue Reading

0

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்… திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள். இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம்… Continue Reading

0

ஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி

ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கி, அடுத்து அட்லாண்டா விமானம் பிடிக்க ஒன்றரை மணி நேரம் தான் இருந்தது. இதற்கிடையில் ஒரு பஸ், ரெண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு ட்ரெயின் இவற்றைக் கடக்க ஓடிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் வந்த ஒரு நபர் “நான் சிகாகோ போறேன், நீங்க அட்லாண்டா தானே போறீங்க, இவங்களை அந்த கேட் வரை… Continue Reading