எங்கேயோ கேட்ட குரல்

உதவியும் நன்றியும்

thirukuralஇந்த இரண்டு திருக்குறள்களைப் பற்றி எங்கேயோ யாரோ சொல்லிக் கேட்ட சில விஷயங்களைப் பகிர வேண்டுமென ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது முயற்சிக்கிறேன்.
இரண்டுமே அறத்துப்பாலில், இல்லறவியல் துறையில், புதல்வரைப் பெறுதல் என்கிற அதிகாரத்திலிருந்து.
குறள் 67:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

கலைஞர் உரை:

தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

கலைஞர் உரை:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

கலைஞர் மட்டுமல்லாது எல்லா உரையாசிரியர்களும், தந்தை மகனுக்கு செய்வதை உதவி என்றும், மகன் தந்தைக்கு செய்வதை நன்றி என்றும் எழுதி இருக்கின்றனர்.

ஆனால் திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தைகளை மீண்டும் கவனியுங்கள்.

அவர் கூறும்போது தந்தை மகனுக்குச் செய்வதை நன்றி என்கிறார். மகன் தந்தைக்கு செய்வதை உதவி என்கிறார்.

தந்தை மகற்காற்றும் நன்றி:

எதற்காக ஒரு தந்தை மகனுக்கு நன்றி செய்ய வேண்டும்?

1. அவருக்கு மகனாக வந்து பிறந்ததற்கு – அப்படிப் பிறக்கவில்லையென்றால், தந்தையை மலடு என்று ஊரார் பழித்திருப்பர்.

2. தந்தையின் பரம்பரை குணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு.

3. ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தவனுக்கு, சமுதாயத்தில் கிடைக்கிற கூடுதல் மரியாதைக்கு.

ஒரு தந்தை, தன் மகனை அவையத்தில் முந்தியிருப்பச் செய்வது, அவர் ஆற்றும் நன்றிக்கடன்.

யாராவது நன்றிக்கடன் செய்துவிட்டு அதற்கு கைம்மாறு எதிர்பார்ப்பார்களா?

“நான் உன்னைப் படிக்க வைத்தேனே, நல்ல வேலை வாங்கிக் கொடுத்தேனே, நீ எனக்கு என்ன செய்தாய்?” என்று ஒரு தந்தை எதிர்பார்க்கவே கூடாது.

அதுதான் வள்ளுவனின் செய்தி.

மகன் தந்தைக்காற்றும் உதவி:

அப்படி என்றால் “இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்து இருக்க வேண்டும்?” என சமூகம் சொல்லும்படி நடந்து கொள்வது ஒரு மகனின் கடமை இல்லையா? கைம்மாறு இல்லையா?

உம் ஹூம்.

அது ஓர் உதவி. மகன் தந்தைக்கு அந்த உதவியை செய்யலாம், செய்யாமலும் போகலாம்.

இப்படி சொல்வதால், பிள்ளைகள் உருப்படாமல் போய்விடாதா?

ஆகாது.

பிள்ளை வளர்ப்பதை எந்த மனநிலையில் இருந்து கொண்டு நாம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதே வள்ளுவனின் எண்ணம்.

நாம் நம்முடைய நன்றிக் கடனை செலுத்துவதற்காக நம் பிள்ளைகளை அவையத்து முந்தியிருப்பச் செய்வோம். வேறு எந்தக் கைம்மாறும் எதிர் பாராமல்.


இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் தானாகவே “இவன் தந்தை எந்நோற்றான் கொல்” எனச் செய்துவிடுவார்கள்.

—–

இங்கே தந்தை எனக் குறிப்பிட்டு இருந்தாலும், அது தாய் தந்தை இருவரையுமே குறிக்கும்.

மகன் எனக் குறிப்பிட்டு இருந்தாலும், மகன் மகள் இருவரையும் குறிக்கும்.

—–

எங்கேயோ, யாரோ சொன்னதை என்னால் முடிந்த அளவில் நினைவிலுருந்து பதிந்திருக்கிறேன்.

உங்கள் கருத்துகளைக் கமெண்டுங்கள். நன்றி.

நான் பாடிய பாடல்

நானும் ஒரு பாடகன்

சின்ன வயதில், குளியலறைப் பாடகனாய்த் தொடங்கி, கல்லூரி நாட்களில் ஓரிரு முறை மேடையேறிய அனுபவம் உண்டு.
என்னை மிகவும் நெருக்கமாய் அறிந்தவர்களுக்கு நான் பாடுவேன் என்று தெரியும்.
ஒரு சில நாட்களில், நண்பர்களின் சந்திப்புகளில் பாடியிருக்கிறேன்.

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “சூப்பர் சிங்கர் 2012”-இல், நானும் ஒரு பாடகன் என என் பெயரைக் கொடுத்தேன்.
குரல் தேர்வுச் சுற்றைத்(Audition) தாண்டி, கிராமியப் பாடல்கள் சுற்றையும்(Folk Songs) தாண்டி, காதிற்கினிய கானங்கள்(Melody Songs) சுற்று வரை வந்தேன்.
அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி.
குரல் தேர்வுச் சுற்று.


கிராமியப் பாடல்கள் சுற்று.

காதிற்கினிய கானங்கள் சுற்று

பிடித்த பாடல்

சர சர சாரக் காத்து…sara sara saara kaathu

சமீபத்தில் வரப்போகும் ‘வாகை சூட வா” திரைப்படத்திற்காக, வைரமுத்துவின் வரிகள், அறிமுக இசையமைப்பாளர் எம்.கிப்ரனின் இசையில், சின்மயியின் இனிய குரலில் வந்திருக்கும் சிறப்பான பாடல்.

கதாநாயகியிடம் இருக்கும் ஒரு குறும்பு மற்றும் காதலை, கிராமிய மணத்துடன் வெளிக்கொணர்ந்த வைரமுத்துவின் வரிகள் சிறப்பானவை. இந்தப் பாடல் குறித்து சின்மயி அவரது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பல இடங்களில் இதன் தங்கிலீஷ் லிரிக்ஸ் காணப்பட்டது. அதைத் தமிழில் கொடுக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆனாலும் சில வார்த்தைகள் சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் கமெண்டுங்கள்.

சர சர சாரக் காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும்போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே…(2)

இத்து…இத்து இத்துப் போன நெஞ்சைத் தைக்க
ஒத்தப் பார்வ பாத்துச் செல்லு
மொத்த சொத்தும் எழுதித் தாரேன்
மூச்சு உட்பட…(2)

டீ…. போல நீ என்னை ஏன் ஆத்துறே…
(சர சர)
எங்க ஊரு பிடிக்குதா…எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல…சுட்ட ஈரல் மணக்குதா
முட்ட கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புகள் கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா?

கம்பஞ்சோறு ருசிக்க வா…சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடைக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோச சுட்டு வச்சி காவ காக்குறேன்..
முக்கண்ணு நுங்கு நான் விக்குறேன்
மண்டு நீ கங்கே(kangu) ஏன் கேக்குறே?

(சர சர)
புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ளே வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுறே கையளவு மனசுலே
கையெழுத்துப் போடுற கன்னிப் பொண்ணு மார்புல

மூனு நாளாப் பாக்கல…ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போவும் பூனைய்யா…
வந்து வந்து பாத்து தான் கிறங்கிப் போறேன்யா…

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல மக்கு நீ…
(சர சர)

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காச்சலா…

பிடித்த பாடல்

சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. புதிய இசையமைப்பாளர் எம்.கிப்ரன் …

சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. புதிய இசையமைப்பாளர் எம்.கிப்ரன் என்பவரின் இசையமைப்பில், ரஞ்சித் மற்றும் நேஹாவின் குரல்களில் மிக இனிமையாக ஒலிக்கிறது.
நீங்களும் கேட்டு ரசிக்க, உங்களுக்காக இங்கே…
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2011/07/Poraney-Poraney-TamilWire.com_.mp3″ title=”போறானே போறானே (Poraaney Poraaney)”]

[player id=670]

பயனுள

எனது வார்ப்புரு [My WordPress Theme]

மதுரை மாவட்ட ஆட்சியர் எழுதும் இணைய வலைப்பூ, என்னுடைய மிஸ்டி லுக் வார்ப்புருவைப் பயன்படுத்துவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
http://thoduvanam.com/tamil/
அவரின் இந்த முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

சுஜாதா

வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து

2010-இல் உலகம் எப்படியிருக்கும் என்று சில கற்பனைகளை, 2005-இல் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா..

2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.
புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்
– செல் ஃபோன்கள் இரட்டிப்பாகும்.
– மக்கள் தொகை 118 கோடியாகும்.
– —
– அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்ஃபோனில் செய்ய முடியும்.
– கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்.
– வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்
– புத்தகங்கள் குறையும்.
– மருத்துவமனைகளில் இடம் போதாது…
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.

முழுப் பட்டியல் இங்கே கிடைக்கும்.
வாவ்…He is such a genius!

படித்ததில் பிடித்தது

வெளிநாட்டில் வாழ்க்கை

வெளிநாட்டில் வாழ்க்கை சொகுசாய் இருப்பது போல் தோன்றும்.
ஆனால் ஓர் இழப்போ துக்கமோ வரும் வேளையில் சேர்ந்து அழ ஆளில்லாமல் துவளும்போது தெரியும் வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள வலி.
நான் இந்த வலியை உணர்ந்தும் இருக்கிறேன், ஆனால் தெளிவாக இந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முயன்றதில்லை.
அதை கீதா ரவிச்சந்திரன் என்பவர் தனது இழப்பு என்கிற பதிவில் செய்திருக்கிறார்.

இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?
நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்?

பிடித்த திரைப்படம்

மிஷ்கினின் நந்தலாலா

வெகுநாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நந்தலாலா திரைப்படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்த முன்னோட்டம் தெரிவிக்கிறது,
I can’t wait!


இயக்குனர் மிஷ்கின், இசை இளையராஜா இருவரும் இணைந்து கலக்கியிருக்கிறார்கள்.
முன்னோட்டத்தின் பின்னணி இசையே மிரள வைக்கிறது.

விருத்தம்

சமீபத்தில் விருத்தங்கள் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதில், சில …

kulir-mazhai-kaakaசமீபத்தில் விருத்தங்கள் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதில், சில தேடல்களைத் தொடர்ந்தேன்.
அப்போது தான், ரஞ்சனி காயத்ரி பாடிய “குளிர் மழை காக்க” என்கிற இந்த விருத்தம் காதில் பட்டது.
நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
[haiku url=”/wp-content/uploads/2010/10/kulir-mazhai-kaatha.mp3″ title=”குளிர் மழை காக்க”]

குளிர் மழை காக்கக் குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி….

பொருள்:
ஓரளவுக்கு எளிமையான பாடல் தான்.
குளிர் மழையில் இருந்து மக்களைக் காப்பதற்காக, கோவர்த்தன மலையைக் கைகளில் தூக்கி நிறுத்தியவனே,
த்ரௌபதியின் மானம் காக்க, ஆடை கொடுத்து உதவியனே,
முதலையிடம் மாட்டிக் கொண்டு பிளிறிய ஆண்யானையின் குரலைக் கேட்டு ஓடிப் போய் காப்பாற்றியவனே
என்னையும் வளர்த்து அருள்செய்.

தமிழ் உச்சரிப்புக்காகவே ரஞ்சனி காயத்ரியைப் பாராட்டலாம். கேட்டு மகிழுங்கள்.

நன்றி:
ஜீவா வெங்கட்ராமனின் பதிவு, இதே பாடலைப் பற்றி
rasikas.org
bollywood-mp3.com