சமீபத்தில் படித்ததில் பிடித்த பதிவுகளுக்கு இங்கே சில சுட்டிகள்…
சொக்கனின் ஏதாச்சும் ரெண்டு மிருகம் பதிவிலிருந்து….
சரவ்-வின் கவித! கவித!!.. படி!! பதிவிலிருந்து….
நீங்களும் படித்து மகிழுங்கள்.
சமீபத்தில் படித்ததில் பிடித்த பதிவுகளுக்கு இங்கே சில சுட்டிகள்…
சொக்கனின் ஏதாச்சும் ரெண்டு மிருகம் பதிவிலிருந்து….
சரவ்-வின் கவித! கவித!!.. படி!! பதிவிலிருந்து….
நீங்களும் படித்து மகிழுங்கள்.

இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது அந்த தினம்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகும் கூட
உள்ளத்தின் உள்ளே பீறிடும் உணர்வுகளை
எழுத்தில் சொல்ல ஏதுவாயில்லை.
எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படியொரு தந்தை.
இருந்த 59 வயதிற்குள் வார்த்தைகளால் சொல்லாமல்
வாழ்ந்து காட்டி நீங்கள் சொல்லிக் கொடுத்தது
இன்னமும் நெஞ்சில் ஈரமாய்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
திருக்குறளில் [நன்றி திருக்குறள் Browser] சொன்னது போல், எங்கள் அனைவரையும் அவையத்தில் முந்தியிருக்க நீங்கள் பாடுபட்டீர்கள்.
இனி நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்
நிச்சயம் செய்வோம். நினைவில் எங்களுடன் நீங்கள் வாழும்போது ஏன் முடியாது?
——–
அப்பாவிற்குப் பிடித்த பாடல் ஒன்று, அவர்களின் நினைவாக.
“எனக்கொரு அன்னை” பாடல் – இளையராஜா அவர்களின் கீதாஞ்சலி என்கிற இசைத்தொகுப்பில் இருந்து…
[audio:enakkoru-annai.mp3]
ஒரு வழியாக, வெளியிட்ட தினத்தன்றே, “நான் கடவுளை”ப் பார்க்க முடிந்தது.
நீங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால், தயவுசெய்து (திருட்டு விசிடி-யில் பார்ப்பதை தவிர்த்து) திரையரங்கத்தில் சென்று பாருங்கள்.
இது போன்ற ஒரு படத்தை எடுத்ததற்காக, நிச்சயமாய் பாலா மற்றும் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்,
குறிப்பாக
என சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம்.
நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
Continue reading “நான் கடவுள் – என் எண்ணங்கள்”
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த, “நான் கடவுள்” திரைப்படம் இன்னும் சில தினங்களில் [ஃபிப்ரவரி 6 – வெள்ளியன்று] வெளியாகிறது.
மற்றவர்களின் விமர்சனம் எதுவும் வெளிவருவதற்கு முன் பார்த்துவிட ஆசை. பார்ப்போம்.
இப்போதைக்கு இதைப் படியுங்கள். பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.
கிறுக்கல்ஸ்.காம் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
சமீப காலத்திய தமிழ் சினிமா சில வித்யாசமான படங்களைத் தருகிறது.
புதிய இயக்குனர்கள் மிகவும் சிரத்தையுடன் கதை சொல்ல வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு புதிய இயக்குனர் ‘நீலன் கே சேகர்’ என்பவரின் படம் தான் “அலிபாபா”.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, படத்தின் விறுவிறுப்பு, பிரகாஷ்ராஜின் நடிப்பு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நாயகன் கிருஷ்ணாவின் நடிப்பு [ஏற்கெனவே அஞ்சலி படத்தில் வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்] என படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாய் உள்ளது.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவரிடன் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
இன்னும் நன்றாக ஓடியிருக்கவேண்டிய படம். ஒருவேளை “அலிபாபா” என்று சம்பந்தமே இல்லாமல் பெயர் வைத்ததால் தான் ஓட வில்லையோ?
சில வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 2008 [Super Singer 2008] நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பாடலை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருந்த, ரவி மற்றும் ஹரி [சகோதரர்கள்] பாடத் தொடங்க, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்.
What an excellent Composition!!!
இந்தப் பாடல், அவர்களே இயற்றி இசையமைத்த பாடல் என்பது தெரியாமல், உடனே இணைய வலையில் போய் “காதல் என் வாழ்வில்” என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒன்றும் அகப்படவில்லை. [ஒருவேளை எதிர்காலத்தில் யாரேனும் தேடும்போது இந்தப் பதிவு தென்படலாம்].
பிறகு YouTube-இல் “Super Singer 2008” என்று தேடிப் பார்த்து, சில பல எபிசோடுகளைக் கடந்து இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தேன்.
கேட்டு மகிழுங்கள். [பாடல் மட்டும் கேட்க விரும்பினால், ஒரு நிமிடம் வரை ஓட்டி விடுங்கள்(Forward)].
எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும்.
இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.
முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல்.
பாடல் : கண்டேன் சீதையை
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com
ராகம்: பாகேஸ்ரீ [Bageshri]
தாளம்: ஆதி [திஸ்ர நடை]
அனுமன் இலங்கை சென்று, சீதையைக் கண்டு திரும்பி வந்து ராமனிடம் சொல்வதைச் சொல்லும் பாடல். அனுமனின் வரவுக்கும், அவர் சொல்லப் போகும் செய்திக்குமாய், ராமனும் மற்றவர்களும் ஆவலாய்க் காத்திருக்கின்றனர். அவர்கள் ஆவலை உணர்ந்து, அனுமன் “கண்டேன்” என்ற வார்த்தையை முதலில் சொல்லித் தொடங்குகிறார். இந்தப் பாடலும் இதற்கு முந்தைய பாடலும், அருணாச்சலக் கவிராயர் எழுதிய “ராமநாடகம்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
பல்லவி:
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா….நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா..அனுபல்லவி:
அண்டரும் காணாத லங்காபுரியில்…(2)
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவைக்
(கண்டேன்)சரணம்:
பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப்
பகலோரு யுகமாக் கழித்தாளே பிரயாசி (2)
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர
சீச்சி நில்லடா என்று ஏசி… (2)
தனித்து தன் உயிர் தன்னை தாங்கிட மகராசி (2)
சாரும்போதே
நானும் சமயம் ஈதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதென்றிடர் மீசி
ராமா ராமா ராமா என்றெதிர் பேசிக்…
(கண்டேன்)
கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ
[audio:kanden-seethaiyai.mp3]
இந்த ராகத்தைக் கேட்க YouTube-இல் தேடியபோது கிடைத்தது…அதையும் ரசியுங்கள்.
Continue reading “முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் …”
அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன்.
இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho]
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
ராகம்: ஹுசைனி
இசைத்தொகுப்பு: அமிர்தம்
ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது இந்தப் பாடல்.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் உணர்வுகளைக் குழைத்து வரும் பாடலைக் கேட்க இங்கே கிளிக்குங்கள்.
அமிர்தம் on ராகா.காம்.
பல்லவி:
எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி!
எப்படி மனம் துணிந்ததோ, சுவாமி?
வனம் போய் வருகிறேன் என்றால்
இதை ஏற்குமோ பூமி?
(எப்படி)
அனுபல்லவி:
எப்பிறப்பிலும் பிரியேன், விடேன் என்று கைதொட்டீரே..(2)
ஏழையான சீதையை நட்டாற்றில் விட்டீரே…(2)
சரணம்:
கரும்பு வில் முறித்தாற் போலே தள்ளாலாச்சுதோ?
ஒரு நாளும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ? (2)
வருந்தி வருந்தி தேவரீர் மெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல (2)
இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ?
என்னை விட்டுப்
பிரிகிறேன் என்று சொல்ல….
(எப்படி மனம் துணிந்ததோ)